- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று வழக்கம் போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அன்று இரவு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் ஜவுளி கடைக்கு வரவில்லை. இது குறித்து ஜவுளி கடைக்காரர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்
குமார் வழக்கு பதிவு செய்து அந்த இளம்பெண் எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.