உள்ளூர் செய்திகள் (District)
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
- வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அனிபா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.எம். நகர செயலாளர் முரளி, வெகுஐன அமைப்பின் நிர்வாகிகள் கலியபெருமாள், சண்முகம், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.