உள்ளூர் செய்திகள் (District)

சுடுகாடு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விவசாயி பலி

Published On 2023-10-01 10:17 GMT   |   Update On 2023-10-01 10:17 GMT
  • சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.
  • திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 65). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகேசன் குமரேசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் அவருடைய மனைவி வாசுகி புள்ளமங்கலத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வயலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சீனிவாசன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கடந்த 2 தினங்களாக தேடி வந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று வடவேர்குடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு வழியாக காலைக்கடன் கழிப்பதற்காக கிராம மக்கள் சென்றுள்ளனர்.

அப்போது சுடுகாடு மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதனைப் பார்த்தவுடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் இடிந்து விழுந்த சுடுகாடு மேற்கூறையை அகற்றிய பொழுது சீனிவாசன் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவர்களுடைய உறவினர்கள் கதிறி அழுதனர் மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக வடவாதிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News