உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது

Published On 2023-04-05 07:58 GMT   |   Update On 2023-04-05 07:58 GMT
  • கோகுல்ராஜை அந்த வழியாக அந்த வாலிபர்கள் வழிமறித்து பணம் கேட்டு கத்தியால் குத்த முயன்றனர்.
  • ஜான்சன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மட்டக்கடை பெறமுத்துவிளையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது33) கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு வேலை முடிந்து கிருஷ்ணராஜபுரம் அருகே வரும்போது அந்த வழியாக அந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியால் குத்த முயன்றனர். சுதாகரித்து கொண்ட அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

ரவுடி கைது

இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திரேஸ்புரம் அண்ணா காலனியை சேர்ந்த ஜான்சன் (என்ற) சுறா ஜான்சன் (27) மற்றும் ஆனந்த் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஜான்சன் மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜான்சனை கைது செய்த போலீசார், ஆனந்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News