உள்ளூர் செய்திகள்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
- போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது.
- ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆட்டையாம்பாளையத்திலிந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து ரோட்டில் விழுந்தது. போக்குவரத்து அதிகமுள்ள அந்த ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.