உள்ளூர் செய்திகள்

நாகை வரதராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-02-26 07:47 GMT   |   Update On 2023-02-26 07:57 GMT
  • வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள பனங்காடி கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோ விலில் திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு நடைபெற்றது.

இதனை யொட்டி முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து வரத விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்க ல்யாணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News