உள்ளூர் செய்திகள்

மாலையம்மன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-05-26 08:56 GMT   |   Update On 2023-05-26 08:56 GMT
  • பொங்கல் வைபவத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலம் நடைபெற்றது.
  • சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடை பெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியபட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 16-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடி தாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைபள்ளி கண்ணகி கலையரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு 23-ந்தேதி காலையில் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலமும், மதியம் அக்கினி சட்டி எடுத்து நகர்வலம் வருதலும். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைபவமும் நடைபெற்றது.

மாவிளக்கு, முளைப்பாரி

சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடை பெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு கட்சி கொடுத்தார். பின்னர் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாம கொடை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு முன்னாள் நகர்மன்ற துணை தலைவரும், தொழிலதி பருமான ஏ.எஸ். ரத்தின வேல், கிருஷ்ண வேணி குடும்பத்தினர் சார்பில் திருகல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதையடுத்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் அன்ன தானம் நடைபெற்றது. அன்னதானம் நிகழ்ச்சியை வணிகவைசிய சங்க தலைவர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். இதில் சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்க துணை தலைவர் பரமசிவன், தூத்து க்குடி வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழனி குமார், மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News