உள்ளூர் செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

Published On 2022-08-04 09:44 GMT   |   Update On 2022-08-04 09:44 GMT
  • இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), கல்வி கட்டணம், பெற்றோர்களுடன் நேரில் வர வேண்டும்.
  • 11.8.22-ம் தேதி பி.ஏ. ஆங்கில பாடப்பிரிவிற்கும், 12.8.22-ம் தேதி பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும்.

பூதலூர்:

தஞ்சை மாவட்டம், பூதலூர் ரெயிலடிகூட்டுறவு காலனி பகுதியில் அமைந்து ள்ள ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (5.8.22) சிறப்பு பிரிவினர் மற்றும் பி.காம் பாடப்பிரிவினருக்கும், 8.8.22-ம் தேதி பி.பி.ஏ. பாடப்பிரிவிற்கும், 10.8.22-ம் தேதி பி.எஸ்சி கணிணி அறிவியல் பாடப்பிரிவிற்கும், 11.8.22-ம் தேதி பி.ஏ. ஆங்கில பாடப்பிரிவிற்கும், 12.8.22-ம் தேதி பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), கல்வி கட்டணம், பெற்றோர்களுடன் நேரில் வர வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபி டித்து காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News