உள்ளூர் செய்திகள் (District)

தேட வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டு மனைவி மாயம்

Published On 2023-09-02 09:14 GMT   |   Update On 2023-09-02 09:14 GMT
  • கணவர் போலீசில் புகார்
  • தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்

செய்யாறு:

செய்யாறு டவுனை சேர்ந்தவர் 34 வயதுடைய வாலிபர். இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது 24 வயது உடைய மனைவி ஸ்ரீபெரும்புதூரில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 31-ந் தேதி இளம் பெண் ஆரணியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றார்.

மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கணவன் அழைத்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி தாலியை கழற்றி வைத்துவிட்டு தனது தாயார் வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து செய்யாறு போலீசில் கணவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News