உள்ளூர் செய்திகள்

5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

Published On 2023-09-29 08:43 GMT   |   Update On 2023-09-29 08:43 GMT
  • கலெக்டர் உத்தரவு
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணி யிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென் னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண் ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News