உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2023-10-05 07:05 GMT   |   Update On 2023-10-05 07:05 GMT
  • கம்பத்தில் மாடுகளை கட்ட சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி அடுத்த அக்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. மனைவி இந்திரா (வயது 48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் இவர்கள் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மாடுகளை வீட்டின் அருகே இருந்த மின்கம்ப த்தில கட்டுவதற்காக இந்திரா சென்றார்.

அப்போது அதில் இருந்த மின்சாரம் இந்திரா மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த இந்திராவின் கணவர் மற்றும் உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் இந்திராவின் அண்ணன் மாரிமுத்து புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடுகளை மின் கம்பத்தில் கட்டுவதற்காக சென்ற போது பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News