உள்ளூர் செய்திகள்

கோதண்டராமர் கோவிலில் திருகல்யாண பிரமோற்சவம் நடந்தது.

மதுக்கூர், கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாண பிரமோற்சவம்

Published On 2023-03-31 09:51 GMT   |   Update On 2023-03-31 09:51 GMT
  • மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டது.
  • ராமனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்தனர்.

மதுக்கூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பஜனைமடத்தெ ருவில் அமைந்துள்ள வேண்டும் வரம் தரும் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீநாமநவமி விழா நடைபெற்றது.

ஆர்ய வைஸ்ய சமூகம் பிள்ளைமார் சமூகம் இணைந்து இதன் அறங்காவலர் பிரகாசம், சின்ன துரை ஆகியோர் தலைமையில் ஸ்ரீராமநவமி விழாவை நடத்தினர்.

மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வந்தார்கள்.

ஸ்ரீராமபி ரானுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து ஹோமம் நடைபெற திருமண கைங்கர்யம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News