உள்ளூர் செய்திகள் (District)

மது விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2023-05-02 08:11 GMT   |   Update On 2023-05-02 08:11 GMT
  • 70 பாட்டில்கள் பறிமுதல்
  • ஜெயிலில் அடைத்தனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது ரெட்டியூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்று கொண்டிருந்த மேலும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரெட்டியூர் பகுதியில் சோதனை செய்தனர்.

சின்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 40) என்பவரை பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவரிடமிருந்து சுமார் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஜோலார்பேட்டை போலீசார் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிபெரமனூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்த நந்தகுமார் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News