உள்ளூர் செய்திகள் (District)

மரக்கன்று நட்ட காட்சி.

கடந்த 6 மாதத்தில் அம்பலூர் ஊராட்சியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது

Published On 2022-07-17 08:48 GMT   |   Update On 2022-07-17 08:48 GMT
  • பசுமை ஊராட்சியாக மாற்ற ஏற்பாடு
  • அதிகாரி ஆய்வு

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பலூர் ஊராட்சி மரக்கன்றுகள் நடுவதில் முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மாதத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடப்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற இதற்கான பணிகளை அந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் செய்து வருகிறார்.

பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தி வரும் இந்த பணியை நேற்று திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு மரக்கன்றுகளை அம்பலூர் பகுதியில் நட்டார்.

அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News