உள்ளூர் செய்திகள் (District)
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிக்குட்பட்ட நியூடவுன், அம்பூர்பேட்டை, பெருமாள்பேட்டை, ஆசிரியர் நகர், கொல்லதெரு உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல். ஏ .கோவி.சம்பத்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.வி குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், நகர துணை செயலாளர கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைத் தலைவர் பி.கே.எம் சந்தோஷ், சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.