உள்ளூர் செய்திகள் (District)

முதியவர் மீது சரமாரி தாக்குதல்

Published On 2023-10-08 08:47 GMT   |   Update On 2023-10-08 08:47 GMT
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் அந்த பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் (வயது 50) என்பவரை திடீரென சரமாரியாக தாக்கியது.

இதில் வரதராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News