உள்ளூர் செய்திகள்

காளை விடும் திருவிழாவில் எருதுகள் சீறிப்பாய்ந்து ஓடிய காட்சி.

காளை விடும் திருவிழா

Published On 2023-05-27 09:20 GMT   |   Update On 2023-05-27 09:20 GMT
  • இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கினர்
  • மாடுகள் மூட்டியதில் 16 பேர் காயம்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன.

எருது விடும் திருவிழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன, திருவிழா தொடங்குவதற்கு முன்பு கால்நடைகளை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

காளை விடும் திருவிழாவிற்கு ஊர் கவுண்டர்கள் எஸ்.சங்கர், ஏ.வாசு ஏ.முருகேசன், எம்.சுப்பிரமணி, ஆகியோர் தலைமை வகித்தனர் .

சி.ரவி. பெரியசாமி, அண்ணாமலை, திருப்பதி, முன்னிலைவகித்தனர்.

எருது விடும் திருவிழாவை ஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார், வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.

அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினர்.

அப்போது எதிரே இருந்தவர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 52, ரொக்கப் பரிசுகள் மேலும் சில்வர் குடம் 10 பேருக்கு வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News