உள்ளூர் செய்திகள் (District)
- விளையாடிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
ஆலங்காயத்தை அடுத்த நிம்மியம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் யோகன்ராவ் (வயது 2). இந்த குழந்தையை குளிக்க வைப்பதற்காக கடந்த 7-ந்தேதி வெந்நீர் வைத்திருந்தனர்.
அப்போது அங்கு விளையாடிய குழந்தை யோகன்ராவ் பாத்திரத்தை இழுத்ததில் வெந்நீர் கொட்டி படுகாயமடைந்தது.
உடனடியாக சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.