உள்ளூர் செய்திகள்

விடுதியில் உள்ள சமையறையை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்த காட்சி.

மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-10-21 10:17 GMT   |   Update On 2022-10-21 10:17 GMT
  • தூய்மையாக வைத்துகொள்ள உத்தரவு
  • சமையலருக்கு அறிவுரை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்கள் விடுதியில் உள்ள சமையலறை மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

மாணவர்களுக்கு சுத்தமாக சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் இவ்விடுதி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் த.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News