- புனித நீர் குடங்களுடன் ஊர்வலம் சென்றனர்
- பொதுமக்களுக்கு அன்னதானம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுக்கா தர்மபுரி மெயின் ரோடு பல்லலப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கணபதி பூஜை, முதல் கால பூஜை, பூர்ணஹுதி, தீபாராதனை, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, தீபாரதனை தொடர்ந்து தம்பதி சங்கல்பம், புனிதநீர் கலசங்களுக்கு பூஜை செய்து முக்கிய நிகழ்வாக புனித நீர் உள்ள குடங்களுடன் மேளதாளம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பெண்கள் பலர் சாமி வந்து ஆடினார்கள் பின்னர் பட்டாளம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து அன்னதானம், சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம், திமுக ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழு துணை தலைவர் ஜி.மோகன்குமார், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.