திருப்பத்தூர் கோவில்களில் கும்பாபிஷேகம்
- அம்மன்களுக்கு சிருறப்பு பூஜை நடந்தது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா சுந்தரம் பள்ளி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், குண்டி மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நடை பெற்றது.
விழா நிகழ்ச்சியை ஒட்டி கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, தம்பதியர்கள் சங்கல்பம், தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கலசங்களில் உள்ள புனித நீர் பூஜை செய்து ஊர்வ லமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.
தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதேபோல திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு அடுத்த சகாதேவன் கொட்டாய் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர் மூலவர் பாலமுருகன் உற்சவர் சுப்பிரமணிய வள்ளி தேவசேனா நவகிரக கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கோபுர கலச பிரதிஷ்டை தொடர்ந்து ஸ்ரீ கணபதி பூஜை பூர்ணக்க்ஹுதி, தீபாரதனை இரண்டாம் கால பூஜை தம்பதி சங்கல்பம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே எஸ் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா சண்முகம் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவல்நா யக்கன்பட்டி கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுகுமார் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தன.