உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை

Published On 2022-08-24 10:28 GMT   |   Update On 2022-08-24 10:28 GMT
  • மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை
  • ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 35வது மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவி கீர்த்திகா பங்கேற்று 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

இந்நிலையில் அவர் பயிற்சி பெற்ற நாட்டறம்பள்ளியில் உள்ள எஸ்கே விஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் தங்க பதக்கம் பெற்ற மாணவிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News