பைக் விபத்தில் வடமாநில வாலிபர் சாவு
- மற்றொருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சஞ்சய் (வயது 30). இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான மற்றொரு பைக்கில் வந்த சோலூர் பகுதியை சேர்ந்த காவலாளி சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீ சார் சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.