ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்ச்சி
- வாணியம்பாடி வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஒன்றியம் பெரியகுரும்பத் தெரு ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பாலம்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தியின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டி.ஆர். செந்தில் வழிகாட்டுதலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி தலைமையில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மக்களுக்கு கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை தடுக்க தண்ணீர் மற்றும் பிற திரவங்களை குடிக்க மக்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டது.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் ரவி மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரசாந்த் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் ஓ.ஆர். எஸ் கரைசல் வழங்கப்பட்டது.