உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி

Published On 2023-08-30 10:09 GMT   |   Update On 2023-08-30 10:09 GMT
  • வீடு வீடாகச் சென்று நேரடியாக களப்பணி

பேட்டை:

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியானகுப்பம் மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் மற்றும் கேத்தாண்டப்பட்டி, ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பம் படிவத்தில் வழங்கியுள்ள தகவல்களை சரிபார்க்கும் பணியை வீடு வீடாகச் சென்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் குறிப்பிட்ட தகவல்கள் உண்மைதானா என குறித்து நேரடியாக களப்பணி நடைப்பெற்று வருகிறது.

இதனை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடிரென பார்வையிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News