உள்ளூர் செய்திகள் (District)

மகளிர் குழு கடன் தகராறில் பெண்கள் மோதல்

Published On 2023-10-13 09:04 GMT   |   Update On 2023-10-13 09:04 GMT
  • 8 பேர் மீது வழக்கு
  • தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொற்கொடி இவர் மகளிர் குழு தலைவியாக செயல்பட்டு வருகிறார்.

இவரது குழுவில் சங்கீதா என்பவர் தனது உறவினர் நிவேதா என்பவருக்கு கடன் தொகை பெற்று கொடுத்து உள்ளார் இதனால் சங்கீதா கடன் தொகை தாமதமாக கட்டுவதாலும் இறுதி தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது.

மகளிர் குழு தலைவி பொற்கொடி மற்றும் 4 உறுப்பினர்கள் சங்கீதாவிடம் நிலுவைத் தொகை கேட்கும் போது தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி இரு தரப்பினரும் கையால் தாக்கிக் கொண்டனர்.

நாட்டறம்பள்ளி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News