உள்ளூர் செய்திகள்
- நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக வாணியம்பாடிக்கு சென்றார். பின்னர் வேலைகள் முடிந்து வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆலாங்குப்பம் அருகே நெடுஞ்சாலையில் வந்த போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். இதில் நேதாஜி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நேதாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் நேதாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.