உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது

Published On 2023-03-13 07:24 GMT   |   Update On 2023-03-13 07:24 GMT
  • கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது.
  • பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் விடுமுறையை முன்னிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.அப்போது அவரின் அருகே இருந்த 2 பேர் கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர் அவர்களை பிடித்து திருடன் திருடன் என சத்தம் போட்டு உள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் அந்த 2 பேரையும் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் ராம்ஜி(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் மற்றொருவரை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

Tags:    

Similar News