உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வெள்ளகோவிலில் பெண் தொழிலாளியை கடித்த பாம்பு

Published On 2023-09-08 10:29 GMT   |   Update On 2023-09-08 10:29 GMT
  • நேற்று வழக்கம்போல் மில்லில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
  • ஒரு தனியார் நூல் மில்லில் புஷ்பா (வயது 33) என்பவர் வேலை செய்து வருகின்றார்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் செங்காளிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் புஷ்பா (வயது 33) என்பவர் வேலை செய்து வருகின்றார். புஷ்பா நேற்று வழக்கம்போல் மில்லில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது ரோட்டில் வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதில் அலறி துடித்த புஷ்பா அருகில் இருந்தவர்களுடைய உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

Tags:    

Similar News