உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

Published On 2022-09-09 08:08 GMT   |   Update On 2022-09-09 08:08 GMT
  • அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
  • 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவிநாசி :

அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 சிறியஅங்கன்வாடிகளில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள இடங்களுக்கு அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கே கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. சில நேரங்களில் அங்கன்வாடியில் உள்ள சமையலர் விடுப்பு எடுத்து விட்டால், அங்கன்வாடி பணியாளர்களே கூடுதலாக சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இது அரசின் முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் திட்டத்தின் நோக்கம் எதிர்பார்த்த பலன் தருவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுக்க அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம், முழு அளவில் பலன் தரும் என்றனர்.

Tags:    

Similar News