உள்ளூர் செய்திகள்
காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா- கோவிலில் சிறப்பு பூஜை
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு பரஞ்சேர்வழி கரிய காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை ஒன்றிய மாணவர் அணியினர் செய்திருந்தனர்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், மாணவர் அணி பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.