உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊத்துக்குளியில் பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2023-03-29 08:26 GMT   |   Update On 2023-03-29 08:26 GMT
  • மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
  • பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது.

ஊத்துக்குளி :

ஊத்துக்குளி அடுத்த இச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய தோட்டத்தில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பால் கறக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது. இதனை யடுத்து அவரை மீட்டு அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் பவானியில் உள்ள தனியார் மருத்துவ மனையில்முதலுதவி சிகிச்சைஅளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News