உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே மதுபானம் விற்ற மீன் கடைக்காரர் கைது

Published On 2023-05-24 04:42 GMT   |   Update On 2023-05-24 04:42 GMT
  • சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கள்ளகிணர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளகிணர் தனியார் நூற்பாலை அருகே மீன் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த மீன் கடையில் தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு(வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News