உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வெள்ளகோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

Published On 2022-10-10 11:03 GMT   |   Update On 2022-10-10 11:03 GMT
  • எல். கே. சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
  • சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டஅனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி., நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News