உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் அரசு பள்ளி ஆண்டு விழா
- குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஒன்றியம், கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு வரவேற்று பேசினார்.பள்ளி ஆண்டு விழாவை யொட்டி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்.பி.பழனிசாமி, பரிசுகளை வழங்கினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி மற்றும் ஆசிரிய ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.