உள்ளூர் செய்திகள்

கணபதிபாளையம், கரைப்புதூர் ஊராட்சி, வடுகபாளையம்புதூர் ஊராட்சி, இடுவாய் பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.

பல்லடம் வட்டார ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

Published On 2022-08-17 06:13 GMT   |   Update On 2022-08-17 06:13 GMT
  • கிராமசபை கூட்டத்தில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பல்லடம் ூ

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.இதில் பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம்,அரசு அதிகாரிகள்,வார்டு உறுப்பினர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமசபை கூட்டத்தில்,ஊராட்சி வளர்ச்சி பணிகள், குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதேபோல பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள்,வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது.கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும்,பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும்,புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையம் ஊராட்சியில், நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அதிகாரிகள், சமரசத்தை அடுத்து சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதேபோல ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News