உள்ளூர் செய்திகள் (District)
- மகிழ்ச்சியான ஞாயிறு” கொண்டாட்டம் நடைபெறுகிறது.
- கலைநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் "மகிழ்ச்சியான ஞாயிறு" கொண்டாட்டம் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மண்டலம்-2, 17வது வார்டு புதிய பேருந்து நிலையம் அருகில், 60 அடி ரோடு, கண்ணகி நகர், எம். எஸ். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே கடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை போல், இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாட்டில் சிறந்த நிகழ்ச்சியாக்க அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.