உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா26-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-06-21 10:19 GMT   |   Update On 2023-06-21 10:19 GMT
  • லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
  • இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது

உடுமலை : 

உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 48-வது ஆண்டு சுதர்சன ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக 26 -ந் தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 7 மணிக்கு அக்னி பிரதிஷ்டை ஹோமம், இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது. 27-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும், 10 மணிக்கு சுதர்சன ஹோமம், 12.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு லட்சார்ச்சனை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது.28-ந் தேதி காலை 6.30 மணிக்கு நித்ய திருவாராதனம், காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை, 9 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, 11 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன அபிஷேகமும் தீபாராதனையும் தீர்த்த பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி சேவையும் தீபாராதனை உபசாரம், இரவு 9 மணிக்கு சர்வதரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News