உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நாளை நடக்கிறது

Published On 2023-02-17 04:33 GMT   |   Update On 2023-02-17 04:33 GMT
  • நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது.
  • நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

ஊத்துக்குளி :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதைெயாட்டி நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News