காங்கயத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
- காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் நால்ரோடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
- முடிவில் ஆலம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் தங்கமுத்து நன்றி கூறினார்.
காங்கேயம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் வேண்டுகோளின் படி காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் நால்ரோடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் காங்கேயம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என். எஸ்.என்., நடராஜ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் அருண்குமார், என்.எஸ்.என். தனபால், பி.கே.பி. சண்முகசுந்தரம், பாப்பினி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் மைனர் பழனிசாமி, யூனியன் கவுன்சிலர் சுதா ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பழனியம்மாள் சாமியப்பன், நால்ரோடு செந்தில், மருதுறை ஜெகதீஸ் உட்பட ஒன்றியம், கிளை மற்றும் மாவட்ட அதிமுகவினர், கூட்டுறவு, பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும், இளநீர், தர்பூசணி, நீர் மோர் வழங்கப்பட்டது. முடிவில் ஆலம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் தங்கமுத்து நன்றி கூறினார்.