உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிறுகதை எழுத விரும்பும் மாணவா்களுக்கான இலவச பயிற்சி பட்டறை: வருகிற 12-ந்தேதி நடக்கிறது

Published On 2022-06-06 11:56 GMT   |   Update On 2022-06-06 12:30 GMT
  • பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 93457-20140 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்
  • எழுத்தாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனா்.

திருப்பூர்:

திருப்பூா் மக்கள் மாமன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறுகதை எழுத விரும்பும் மாணவா்களுக்கான இலவசப் பயிற்சிப் பட்டறை மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்றத்தில் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில் எழுத்தாளா்கள் சுப்ரபாரதிமணியன், ரத்தினமூா்த்தி, அழகுபாண்டி, முத்துபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனா். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 93457-20140 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News