வெள்ளகோவில் அரசு பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா
- பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார்.
- பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார். மாணவ- மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதி மொழியின் போது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்கிறேன், எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.