உள்ளூர் செய்திகள் (District)
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா பகுதியில் நாளை மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 29-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியாயிபாளையம், கே.ஆா்.சி.அமிா்தவா்ஷினி நகா், கே.ஆா்.சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.