உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள்  மனு அளித்த காட்சி.

பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி எம்.எல்.ஏ-விடம் பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-03 11:02 GMT   |   Update On 2023-08-03 11:02 GMT
  • பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
  • பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அவ்வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணபதி நகர் மற்றும் செட்டிபாளையம் ரோடு பொதுமக்கள், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து அளித்த மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது; - பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.

பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்படுகின்றது. எனவே அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.மேலும் மது கடையை அகற்றக்கோரி வரும் ஆகஸ்ட் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

எனவே அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

Tags:    

Similar News