உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
- நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
போதிய வடிகால் வசதியின்றி அமைக்கப்பட்டுள்ளதால், மழைகாலங்களில் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீர் வடிகால் வசதி செய்து, அங்கு தண்ணீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.