உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

அவினாசி அருகே சேவல் சூதாட்டம் - 2 பேர் கைது

Published On 2023-05-15 11:41 GMT   |   Update On 2023-05-15 11:41 GMT
  • அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
  • இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

அவினாசி :

அவினாசி அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டு பகுதியில் குன்னத்தூரை சேர்ந்த யோகமூர்த்தி (வயது 38), வஞ்சிபாலயத்தைச் சேர்ந்த சந்தோஸ் குமார்(26), அவினாசி ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கிலி ராஜ்(27) மற்றும் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (27) ஆகியோர் சேவல் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News