உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது

Published On 2023-03-03 07:00 GMT   |   Update On 2023-03-03 07:00 GMT
  • விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம், வயது வரம்பு இல்லை.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் 69 -வது மாநில அளவிலான பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரத்தில் வருகிற மாா்ச் 9-ந்தேதி முதல் 12 -ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப்போட்டியில் பங்குபெற திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான மூத்தோா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் மணி மஹாலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து குழுக்களின் வீராங்கனைகள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. 75 கிலோ மற்றும் அதற்கு மேல் உள்ள திருப்பூா் மாவட்ட வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் 12 வீராங்கனைகள் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம், 3 மற்றும் 4-வது பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News