உள்ளூர் செய்திகள்
பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூா் துணை மின் நிலையப் பகுதிக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருமால்லூா், லண்டன் சிட்டி, வாஷிங்டன் நகா், கணக்கம்பாளைம், மீனாட்சி நகா், பொன்விழா நகா்.