உள்ளூர் செய்திகள்
- அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.
- மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மின்சாரத்தை தடை செய்து மின்மாற்றியை சீரமைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர், பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்மாற்றி தொடர் மழையினால் பிடிமானம் இழந்து அருகே உள்ள சுவற்றின் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை, தகவல் அறிந்த பல்லடம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அந்தப் பகுதியில் மின்சாரத்தை தடை செய்து, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மின்மாற்றியை சீரமைத்தனர்.
மின்மாற்றி அருகே வீடுகள் எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.