உள்ளூர் செய்திகள்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
- நாளை நடக்கிறது
- அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு பாலாபிஷேகம், மாலையில் சாமிக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காய்கறி அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் அருகே உள்ள ஏரியில் அன்னம் கரைக்கப்படுகிறது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதேபோல் கண்ணமங்கலம் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயிலிலும் நாளை அன்னாபிஷேகம், அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் நாகநதி ஆற்றில் அன்னம் கரைக்கப்படுகிறது. பக்தர்கள் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.